சாத்தனூர் அணை - திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கனஅடிகள். முழுஅளவு119 அடிஉயரம் கட்டப்பட்ட அணை தென்னிந்தியாவின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்களுடைய குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளை இந்த அணை சந்திக்கிறது.
திருவண்ணாமலை
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில்
இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும்
இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
திருவண்ணாமலை கற்பனைக்கு
அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த
எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில்
இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக
கேள்விப்படுவதும் அரிது. பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு
இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு
வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள்.
இந்த நகரம் பஞ்ச பூத
ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச
பூதங்களை சிதம்பரம்,
ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள்
பிரதிபலிக்கின்றன. இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள்
கொண்டாடப்படுகின்றன. நவம்பர் / டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம்
மிகவும் புகழ்வாய்ந்தது.
கிரிவலம்
கார்த்திகை தீப
திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம்
வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர்.
பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதை இரண்டு உள்ளது. தமிழ் நாள்காட்டியில் இவை
கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு
கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை
உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம்
ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது.
அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய
இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.
திருவண்ணாமலை நகரம் உருவாக்கம்
·
திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து
வாழ்ந்து வருகின்றனர். இது "மதுரை" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது.
·
திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.
திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.
·
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை
நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது.
·
கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப்
பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும்
இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின்
முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில்
சிறந்து விளங்கியது.
·
பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்
மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய
நகராக விளங்கியது.
·
திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது.
·
1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல்
நிலை நகராட்சியாக உருவானது.
·
1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகவும்
தரம் உயர்த்தப்பட்டது.
அமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்!
திருவண்ணாமலை ஒரு சிற்றூர்.
சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து
கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித
பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சிறியோருக்கும், பெரியோருக்கும் இது
பாதுகாப்பான நகரம் ஆகும். இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள விபத்துகள் மற்றும்
திருட்டுக்களின் எண்ணிக்கை, நாட்டின் குற்ற விகிதத்தோடு ஒப்பிடப்பட்டால் மிகவும்
குறைவானது.
மக்கள் இசைவோடு வாழ்ந்து, தங்கள் தொழில்களை இயன்றவரை அமைதியாக
செய்கின்றனர். இந்த பட்டணத்தை பெங்களூரோடு இணைக்கின்ற முக்கிய சாலைகளிலேயே இந்த
நகரத்தின் தொழில் மையங்கள் இருக்கின்றன.
அணுகுதலும், வானிலையும்!
தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை
பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை
சந்திப்பில் இருந்து சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது. திருவண்ணாமலை ரயில்
பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும். திருவண்ணாமலையிலிருந்து
·
பெங்களூர் –
எஸ்வந்த்பூர் / கொல்கத்தா – ஹௌரா / ஷீரடி சாய்பாபா / திருப்பதி ஆகிய ஊர்களுக்கும்
·
கடலூர் / பாண்டிச்சேரி
/ மன்னார்குடி / மாயவரம் / கும்பகோணம் / தஞ்சாவூர் / திருச்சி / திண்டுக்கல் /
மதுரை ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.
·
காட்பாடி - விழுபுரம்
பணிகள் ரயில் / காட்பாடி - திருவண்ணாமலை பயணிகள் ரயில்
·
கடலூர் - ஆரணி ரோடு
பயணிகள் ரயில் தினம்தோறும் இயக்கபடுகின்றன.
இந்த நகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இருக்கின்றது.
இந்நகருக்கு நெருக்கமான விமான நிலையம் சென்னை சர்வதேச விமானநிலையம் ஆகும். ஆனால்,
சாலை வழியாக பயணம் செய்வதே இந்த பட்டணத்தை அடைய சிறந்த வழி.
உஷ்ணமான கோடை வெயிலையும், மிதமான மழைப்பொழிவையும், மென்மையான
குளிர்காலத்தையும் இந்நகரம் பெற்று இருக்கிறது.
No comments:
Post a Comment